'உன் வீட்டிலிருந்து
என்ன கொண்டு வந்தாய்'
அக்காவிடம் கேட்டார் அத்தான்
கோபித்துக் கொண்டு
பிறந்தகம் வந்தாள் அக்கா
'முதலில் உன் வீடுக்குப் போ ஆரணி
மற்றவை பிறகு கதைக்கலாம்'
அக்காவிடம் சொன்னாள் அம்மா
'என் வீடு எது தாரணி?'
இன்னும் தன்வீடு எதுவெனத் தெரியாமல்
என்னிடம் கேட்டாள் அக்கா
கேள்விகளுக்கு பதில்!
ReplyDeleteஇருக்கலாம்!
பதில் இல்லா கேள்விகளுக்கு..
விடைகள்..
ஏதென அறியும் வாய்ப்பு மறுக்கப்பட்ட..
மகள்கள்..! மருமகள் ஆனபின்.. மருதலிப்பு மகளாய்
நச்சென்று சுருக்கமாக நெஞ்சைத்தொடும் வரிகள்
ReplyDelete